பெரியார் ஒரு பெரிய பச்சைக்கல் மோதிரம் போட்டிருப்பார். கடைசிவரையில் எந்தச்சுழ்நிலையிலும் பெரியாரின் கையைவிட்டு அதைக் கழற்றவேயில்லை. இதைப்பற்றிய பல விமர்சனங்கள் உண்டு. ஒவ்வொரு துறையைச்சார்ந்தவர்களும் அதற்கொரு விளக்கம் சொல்வார்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் யாரும் பெரியாரின் பக்கம் கூடப் போயிராதவர்கள்.
.......தமிழ் ஓவியா
பெரியார் அணிந்த்திருந்த பச்சைக்கல் மோதிரம், இவ்வளவு வரலாற்று உண்மைகளைக் கொண்டது என்று அறிந்தும் அதனை ஒரு நடிகரின் கையில் அணியக் கொடுக்கிறார் வீரமணி, என்றால் இது வீரமணியின் அறியாமையா அல்லது வீரமணிக்கு வந்த பதவி கொழுப்பா என்று தெரியவில்லை.
பெரியார் திரைப்படத்தில் பெரியாரை கொச்சை படுத்தி இருப்பதுதான் உண்மை.
அந்த படம் வெளி வந்ததற்கு பதில் அது வெளிவராமல் இருந்திருந்தால், அதுவே நல்லதாக இருந்திருக்கும்.
'கடவுள் இல்லை' என்ற பொன்மொழியை பெரியார் சொன்னது ஒரு பொதுக்கூட்டத்தில், ஆனால் பெரியார் படம் சொல்வது என்ன?
ஒரு ஜோடி செருப்புக்காகவா, பெரியார் "கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை" என்றார்.
அந்த படத்தில் வரும் காட்சி அப்படித்தானே சொல்கிறது?
பெரியாரை பெரியாராக காட்டாமல், வடிவேலு போன்ற ஒரு காமெடியனாகவும், விபச்சார விடுதிக்கு போகும் ஒரு காமுகனாகவும் சித்தரித்திருக்கும் ஒரு படம் பெரியார்.(அது உண்மையாக இருக்கலாம் ஆனால் அவ்வளவு முக்கியத்துவம் நிறைந்ததா என்ன)
அதற்கு ஒரு பாராட்டு விழாவாம், பெரியாரின் மோதிரம் பரிசாம், வெங்காயம்.
படத்தில் சொல்லவேண்டிய உண்மைகள் வேறெதுவும் இல்லையா?
பேரறிஞர் குத்தூசி குருசாமியை ஏன் இருட்டடிப்பு செய்ய வேண்டும்.
சுமார் முப்பது ஆண்டு காலமாக பெரியாரோடு பெரியாராக வாழ்ந்த குத்தூசி குருசாமி அவர்களை வீரமணி கண்டு கொள்வதே இல்லை.
ஒரு உண்மை பெரியார் தொண்டரான அறிஞர் குருசாமியை இன்றைய இளைஞர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் வீரமணிக்கு இருக்கும் தயக்கம் ஏன்?
இன்னொரு முக்கிய விஷயம். அண்மையில் நடந்தது. கருணாநிதியும் வீரமணியும் உண்மையான பெரியாரியலாளர்கள் அல்ல என்பதை உணர்த்தும் சம்பவம்.
தினகரன் என்றொரு கிறிஸ்தவ மத போதகர் இருந்தார். பின்பு இறந்து போனார்( உயிரோடு இருக்கும் போதே சொர்க்கத்துக்குப் போனதாக கதை அளந்தவர். இப்போது எங்கு இருக்கிறாரோ).
தமிழக அரசு சென்னையில் உள்ள க்ரீன்வேய்ஸ் சாலைக்கு மேற்கண்ட நபருடைய பெயரை சூட்ட இருப்பதாக அறிவித்திருக்கிறது. இதை எல்லாம் கண்டு கொள்ள மாட்டார் வீரமணி.
தினகரன் தமிழ் சமுதாயத்தை ஏமாற்றி பிழைத்தவர், அவர் மக்களுக்கு செய்த நன்மை என்ன? அவரது பெயரை ஒரு முக்கிய சாலைக்கு ஏன் சூட்ட வேண்டும்.
தமிழக அரசு சாலைகளுக்கு இனி பார்ப்பன சங்கராச்சாரி பெயரையும் சூட்டும் என எதிர்பார்க்கலாமா? அவர்கூடத்தான் பள்ளி, தொண்டு நிறுவனங்களெல்லாம் நடத்துறாரு..
*********
'நாத்திகம்' ஆசிரியர் திரு.ராமசாமி அவர்கள் பெரியார் திடல் குறித்தும் வீரமணி குறித்தும் உண்மைகளைச் சொல்லிக்கொண்டிருப்பதால், அதனை பெரியார் திடலுக்கு வரும் வாசகர்கள் படித்து உண்மைகளை அறிந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், 'நாத்திகம்' இதழை யாரும் படிக்கா வண்ணம் பார்த்து வருகிறார் போலி பெரியாரியவாதி கி.வீரமணி.
இவர் செய்வதெல்லாம் பெரியாரியத்திற்கு குழி தோண்டும் வேலையாகத்தான் இருக்கிறது. (பெரியாரியத்திற்கு குழி வெட்டுவதால் 'வெட்டி' வீரமணி என்று பெயர்)
உண்மையான பெரியார் தொண்டர்கள் பெரியாரின் நூல்களை வெளியிட முன்வந்தாலும் அதனை அனுமதிக்காமல் வெட்டியாக அரசியல் செய்து வருகிறார் இந்த 'வெட்டி' வீரமணி.
வாழ்வியல் சிந்தனைகள் வெளியிடும் வீரமணி, அதே வேகத்தையும் முயற்சியையும் பெரியார் நூல்களை வெளியிடுவதில் காட்டி இருந்தால் 'சேது' கால்வாய் திட்டத்திற்கு இந்த சோதனை வந்திருக்காது.
******
'நாத்திகம்' இதழ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் திடல் நூலகத்தில் கிடைக்கும், ஆனால் தற்போது கிடைப்பதில்லை, 'இதற்கான காரணம் என்ன' என்று பெரியார் திடல் நூலகத்தில் இருந்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன், அதற்கு அவர் சொன்னார் 'நாத்திகம் இதழில் 'வீர'மணியை தாக்கி அதிகமாக கட்டுரைகள் வருவதால் தற்போது அதனை பெரியார் திடல் நூலகத்தில் அனுமதிக்கப் படுவதில்லை' என்று.
பச்சைக் கல் மோதிரம் குறித்த உண்மை சம்பவத்தை விளக்கி அதனை ஆவணமாக பெரியார் நினைவிடத்தில் வைப்பது நல்லதா அல்லது, அதனை சத்யராஜ் கையில் அணிவிப்பது நல்லதா?
Tuesday 3 March 2009
Subscribe to:
Posts (Atom)